Annayin Arul

Posted by stylesen
அன்னையின் அருள்
அன்னைமீர்! நின்னருள் கண்டேன் - அதை அனைவரும் உணர்ந்திட ஆசைகள் கொண்டேன் வெற்றி கிடைத்தது பாரு - அந்த வெண்ணிலா ஒளிர்வுக்கு ஈடொன்று உண்டோ? கண்பெற்ற பயனின்று கண்டேன் - மேலும் கவிபாடும் திறனினை அன்னையால் பெற்றேன்! கவிஎழுதும் திறனொன்று போதும் - இந்த கலியினில் அன்னையின் புகழினைச் சொல்வேன்! ஆதவன் கதிர்களின் முன்னே - அந்த அகல பனிமலை கறைவது போலே, வேத குரிசிலே நின்னை - நான் வேண்டிய பொூழுதினில் பாவங்கள் சாமோ? வீணர்கள் வாழ்கின்ற ஊரில் - அன்னை வீழ்ச்சிகள் இல்லாமல் காத்திட கண்டேன், பாணர்கள் இசைகின்ற பண்ணில் - உள்ள பரவசம் அன்னையை போற்றலில் பெற்றேன்! அலைபாயும் மனதினை கொண்டேன் - அந்த அல்லல்கள் தீர்ந்திட அன்னையை தொழுதேன், நிலைகொள்ள வழிஇல்லை எனினும் - அன்னை நின்னருள் சேர்ந்திட்டு நிலைத்திட நினைத்தேன்! *அன்னை - பராசக்தி

deep in concept

hatsoff. your ideas are deep to think and worthy to be preserved.


Thanks for your appreciation

Thanks for your appreciation :)