Ithuvarai En Kooravillai?

Posted by stylesen
இதுவரை ஏன் கூரவில்லை?
இதற்கு முன்பு இப்படி ஒன்று இருந்த தென்று என்ன சான்று? இதயச் சுவரில் எழுதிய சொல்லை இன்னும் ஏன்நீ வெளியிட வில்லை? இனிபோய் நீயும் வெளியிடு வாயெனில் இனிவரும் விளைவுகள் நேரிடும் உனக்கே இடியும் தாங்கும் இதயம் அன்று இரண்டே சொல்லில் இறந்தே போகும் இதயச் சுவரும் இருகிப் போகும் இனிய இதயம் வெம்பிச் சாகும் இளமை முழுதும் தனிமை ஆகும் இனிமை இளமையில் இன்மை ஆகும் இதற்கு முன்பு இப்படி ஒன்று இருந்ததென்று இதுவே சான்று!